பவளம் கலைப் போட்டிகள்
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் பவளம் கலைப் போட்டிகள் 13.09.2023 மற்றும் 14.09.2023 ஆகிய இரு தினங்கள் துறைகளுக்கிடையே நடத்தப்பட்டது. மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதற்கான பரிசளிப்பு விழா 25.09.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை எமது கல்லூரி முதல்வர். முனைவர். எம். வான்மதி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக Administrator, Gamesville Sports Academy Thoothukudi, திருமதி.V.விஸ்வ பாரதி அவர்கள் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். நுண்ணுயிரியல் துறை மாணவிகள் சுழற் கோப்பையை வென்றனர். மாணவி யூனிகா வரவேற்புரை நல்க வள்ளீஸ்வரி நன்றியுரை பகர, அனுஸ்ரீ தேவி தொகுப்புரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.
