தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக ‘தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா போட்டிகள்’
நமது காமராஜ் மகளிர் கல்லூரியில் 27.12.2024 அன்று தமிழ்த்துறை பாரதியார் மன்றம் சார்பாக தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. ‘நுகர்வோருக்கான நியாயமான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பினை மையமாகக் கொண்டு வாசகம் எழுதுதல், ஓவியம் வரைதல்,கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் நமது கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தினர்.
